சந்திர கிரகணம்: பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் யார்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2015 03:04
மதுரை: இன்று சந்திர கிரகணத்தை முன்னிட்டு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் குறித்து பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது. அஸ்தம் நட்சத்திரத்தில், ராகு பகவான் சந்திரனை விழுங்குகிறார். மாலை 3.46 மணிக்கு துவங்கும் கிரகணம் 5.30 மணிக்கு முழுமை அடைகிறது; இரவு 7.15 மணிக்கு விடுகிறது. உத்திரம், அஸ்தம், சித்திரை, திருவோணம், ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், சனிக்கிழமை பிறந்தவர்களும் கிரகண சாந்தி செய்து கொள்ள வேண்டும். கிரகணம் முடிந்ததும் நீராடி கோயில்களுக்குச் சென்று தங்கள் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும்.