நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் ஓசூரம்மன் கோவிலில் தெப்பல் உற்சவத்தில் அம்மன் அருள்பாலித்தார். நெல்லிக்குப்பம், கீழ்பட்டாம்பாக்கம் ஓசூரம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் பத்தாம் நாள் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. கோவில் முன் குளம் போல் வெட்டி தண்ணீர் தேக்கினர். அதில் தெப்பல் உற்சவத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.