மந்தாரக்குப்பம்: கீழ்பாதி பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி சுவாமி வீதியுலா வந்து அருள்பாலித்தார். கீழ்பாதி பாலமுருகன் ÷ காவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 24ம் தேதி துவங்கியது. தினசரி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்தது. பங்குனி உத்திரத்தையொட்டி 3ம் தேதி, பக்தர்கள் பால்குடம், காவடி சுமந்து, செடலணிந்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் ராஜ அலங்காரத்தில் பாலமுருகன் சுவாமி வீதியுலா வந்து அருள்பாலித்தார்.