பதிவு செய்த நாள்
06
ஏப்
2015
12:04
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே, கோவில் வேலில் செருகிய, ஒரு எலுமிச்சை பழம், 23 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில், இரட்டை குன்று மீதுள்ள ரத்தின வேல் முருகன் கோவில் கருவறை யில், வேல் மட்டுமே அமைக்கப்பட்டு, பக்தர்கள் வழிபடுகின்றனர். கடந்த, 800 ஆண்டுகள் பழமையான இக்கோவி லில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா நடத்தி, ஒன்பது நாட்கள் வேலில் செருகிய எலுமிச்சை பழங்கங்களை, 11ம் நாளில் இடும்பன் பூஜையில் வைத்து ஏலம் விடுவர். இப்பழத்தை வாங்கி சாப்பிட்டால், குழந்தை பாக்கியம் ஏற்படும் என்ற ஐதீகம் இருப்பதால், மக்கள் போட்டி போட்டு ஏலம் எடுப்பர். இக்கோவிலில் பங்குனி உத்திர விழா, கடந்த மாதம் 25ம் தேதி துவங்கியது; கடந்த 31ம் தேதி, திருக்கல்யாணம்; ஏப்., 2ம் தேதி தேர் திருவிழா; 3ம் தேதி காவடி பூஜை நடந்தன. நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு நடந்த இடும்பன் பூஜையில், மார்ச் 25ம் தேதி முதல், ஏப்., 2ம் தேதி வரை, வேலில் செருகிய எலுமிச்சை பழங்கள் ஏலம் விடப்பட்டன. முதல் நாள் வேலில் செருகிய எலுமிச்சை பழம், 23 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது; ஒன்பது எலுமிச்சை பழங்களும், 61 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.