சோழவந்தான் : சோழவந்தான் பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி முளைப்பாரி பொங்கல் திருவிழா 10 நாட்கள் நடந்தன. நேற்று முன்தினம் பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று மாலை முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அம்மன் ரிஷப வாகனத்தில் உலா வந்தார். ஏற்பாடுகளை விழா குழு நிர்வாகிகள் முருகேசன், ஜவகர், சண்முகராஜா, அண்ணாமுருகன், குணசேகரன், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.