Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செப்பறை அழகியகூத்தர் கோயிலில் ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாமண்டூர் குகை கோவில்கள் சுற்றுலா தலமாக மாறுகிறது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2011
11:06

மாமண்டூர் குகைக் கோவிலுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை மீட்டு, சுற்றுலாத் தலமாக மாற்றும் பணியில், இந்திய தொல்லியல் துறை ஈடுபட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம், கிழக்கு எல்லையில் அமைந்துள்ளது மாமண்டூர் பெரிய ஏரி. இம்மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரி. 4,500 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி நீரை கொண்டு, 18 கிராம விவசாயிகள் பயனடைகின்றனர். இதன் கரை, இயற்கை எழில் கொஞ்சும் வகையில், மலைகளால் சூழப்பட்டுள்ளது. இந்த மலையில் உள்ள கற்களை குடைந்து, குகைக் கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. 500 வருடங்களுக்கு முன், இந்த கோவில் செதுக்கப்பட்டு இருக்கலாம் என வரலாறு கூறுகிறது. பெரிய தூண்களுடன், சுவாமி சிலைகள் வைப்பதற்கான அறைகளும் அமைந்துள்ளன. இங்கு, என்ன சிலைகள் வைக்கப்பட்டிருந்தது என்பதை தெரிந்து கொள்ள முடியவில்லை. நவாப்புகள் ஆட்சி புரிந்த காலத்தில், இங்குள்ள சிலைகள், அவர்கள் மூலம் உடைக்கப் பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்திய தொல்லியல் துறை மூலம், 1958ம் ஆண்டு முதல், குகைக் கோவில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மலையடிவாரத்தில், கோவிலுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை, இந்திய தொல்லியல் துறையினர் மீட்டு, கம்பி வேலிகள் அமைத்துள்ளனர். கோவிலுக்கு நுழைவு வாயிலும், சுற்றுலாப் பயணிகளுக்காக தங்கும் அறை, கழிப்பறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இதனால், சுற்றுலா பயணிகள் இக்கோவிலுக்கு வரத்துவங்கியுள்ளனர். காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில், நரசமங்கலம் கிராமத்தையொட்டி, கோவிலுக்கு செல்லும் வழிக்காட்டி பலகையும் வைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் இந்திய தொல்லியல் துறையைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறும்போது, "மாமண்டூர் குகைக் கோவிலை அழகுப்படுத்தி வருகிறோம். கோவிலுக்கு செல்லும் ஒரு கிலோ மீட்டர் தூர மண் சாலையை தார் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த பணி முடிந்ததும், சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கூழ் படைத்து ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆடி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை ... மேலும்
 
temple news
திருப்புவனம்; ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar