உளுந்தூர்பேட்டை: மடப்பட்டு, ஸ்ரீசக்தி சாய்பாபா கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. உளுந்தூர்பேட்டை தாலூகா, மடப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள, ஸ்ரீசக்தி சாய்பாபா கோவிலின், மகா கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. இதனை முன்னிட்டு, நேற்று மாலை 5:00 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தது. இன்று காலை 9:30 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.