Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா ... சிதம்பரம் நடராஜர் கோவிலில் யாகசாலை பூஜை இன்று துவக்கம்! சிதம்பரம் நடராஜர் கோவிலில் யாகசாலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழி சட்டைநாதர் கோயிலில் திருமுலைப்பால் விழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஏப்
2015
03:04

மயிலாடுதுறை: சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் கோவில் திருமுலைப்பால் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Default Image
Next News

நாகை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான ஸ்ரீ சட்டைநாதர் கோவிலில் உள்ளது. இங்குள்ள பிரம்ம தீர்த்தக்கரையில் பசியால் அழுத திருஞானசம்பந்தருக்கு, உமையம்மை ஞான ப்பால் வழங்கினார். இதனால் ஞானம்பெற்ற திருஞானசம்பந்தர் 3வது வயதில் தோடுடைய செவியன் என்ற முதல் தேவார பதிகத்தை பாடினார்.

இதனை போற்றும் வகையில் ஆண்டு தோறும் இக்கோயிலில் திருமுலைப்பால் விழா நடத்தப்படுவ து வழக்கம்.இவ்வாண்டு திருமுலைப்பால் விழா  மதியம் தருமை ஆதினம் 26வது குருமகா சன் னிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ சண்முக தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடந்தது. விழாவை முன்னிட்டு காலை தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள திருஞானசம்பந்தருக்கு சிற ப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஓதுவார்கள் தேவாரம்பாட திருஞானசம்பந் தர் பல்லக்கில் பிரம்ம தீர்த்தக்கரையில் எழுந்தருளினார். மதியம் 2. 30 மணிக்கு தருமை ஆதினம் முன்னிலையில் உமையம்மை புஷ்ப பல்லக்கில் வந்து பிரம்ம தீர்த்தகரையில் எழந்தருளி திருஞானசம்பந்தருக்கு தங்க கின்னத்தில் ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் பிரம்ம தீர்த்தக்கரையில் எழுந்தருளி திருஞானசம்பந்தருக்கு காட்சியளித்தனர்.அப்போது சுவாமி,அம்பாள் மற்றும் திருஞானசம்பந்தரு க்கு மகா தீபாராதனை செய்யப்பட்டது. பூஜைகளை ராமு மற்றும் அரவிந்த் குருக்கள்கள் தலைமையிலானோர் செய்து வைத்தனர்.

திருமுலைப்பால் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பலா,வாழை,பேரிட்சை பழங்கள்,சர்க்கரை கலந்த பாலை சுவாமி, அம்பாளுக்கு நைய்வேத்தியம் செய்து தங்களது குழந்தைகள் ஞானம் பெற பிரார்த்தனை செய்தனர். விழாவில் திருச்சி மௌன மடம் கட்டளை விசாரணை ஸ்ரீ மத் மௌன குமாரசாமி தம்பிரான் சுவாமி, திருக்குவளை ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயில் கட்டளை ஸ்ரீ மத் திருஞானசம்பந்தம் தம்பிரான் சுவாமி, சீர்காழி எம்.எல்.ஏ. சக்தி மற்றும் ஆசிரியர் கோவி நடராஜன், வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக திருஞானசம்பந்தர் சன்னதியில் நடந்த நிகழ்ச்சியில் பழனி வெங்கடேச ஓது வாருக்கு திருமுறை கலாநிதி என்ற பட்டத்தை தருமபுரம் ஆதின குருமகா சன்னிதானம் வழங்கினார். திருமுலைப்பால் திருவிழா ஏற்பாட்டை கோயில் கண்காணிப்பாளர் தியாகராஜன், சிராப்பு செந்தில் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். சீர்காழி டி.எஸ்.பி., வெங்கடேசன் தலைமையில் 250க்கும் மேற் பட்ட போலீஸ் மற்றும் ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆங்காங்கே விடியோ கேமராக்கள் பொறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மகிஷாசுரமர்த்தினி கோவிலில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு யாகம் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar