தங்கள் கணவனைத்தவிர மற்றவர்களிடம் மிகுந்தஜாக்கிரதையாக இருக்கவேண்டுமென பெண்களுக்கு இஸ்லாம் அறிவுரை சொல்கிறது.ஒருமுறை நபிகள் நாயகத்தைச் சந்திக்க பார்வை தெரியாத ஒருவர் வந்தார். அவரது பெயர் உம்மி மக்துõம். அப்போது நாயகம், தனது துணைவியார் ஆயிஷா அம்மையாருடன் பேசிக் கொண்டு இருந்தார். பார்வை தெரியாதவர் வீட்டிற்குள் வந்ததும், தனது மனைவியை உள்ளே போகச் சொன்னார். ஆயிஷா அம்மையாருக்கு எதுவும் புரியவில்லை. பிற ஆண்கள் வந்தால், பெண்கள் வீட்டிற்குள் எழுந்து சென்றுவிடுவது அரபு நாட்டில் வழக்கம் தான். ஆனாலும், பார்வையற்ற ஒருவர் வந்தபோது, எதற்காக தன்னை நாயகம் உள்ளே போகச்சொன்னார் என்பது அம்மையாருக்கு புரியவில்லை. நாயகமும், அந்த நண்பரும் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் அவர் விடை பெற்றுச் சென்றார். அதன்பிறகு ஆயிஷா அம்மையார், அண்ணலாரே! வந்தவருக்குத்தான் பார்வை கிடையாதே, அப்படி இருக்கும்போது என்னை ஏன் உள்ளே போகச்சொன்னீர்கள்? என்றார். அதற்கு நாயகம், அவரால் பார்க்க இயலாது என்பது உண்மைதான். ஆனால், உம்மால் அவரைப்பார்க்க முடியுமே! அதனால்தான் உம்மை உள்ளே போகும்படி சொன்னேன், என்றார். பெண்களின் பாதுகாப்பு கருதி ஒழுக்கத்தைப் போதிக்கிறது இஸ்லாம்.