பதிவு செய்த நாள்
24
ஏப்
2015
05:04
மனைவி சம்பாதித்தால், அந்த பணம் முழுவதும் தனக்கே சொந்தம் என்பதுபோலகணவனும், அவனது வீட்டாரும் உரிமை கொண்டாடுவர். இதுதான் நடைமுறையில் இருக்கிறது. பணத்தை உழைப்பினால் திரட்டும் உரிமையை பெண்களுக்கும் இஸ்லாம் வழங்கியிருக்கிறது. அதேநேரம் பெண்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில்இருந்து தமது கணவருக்கு செலவு செய்யவேண்டிய அவசியம் எதுவுமில்லை. ஆனால், ஆண்கள் தங்கள் மனைவி, மக்களுக்காக செலவு செய்வது கட்டாயக் கடமை.உங்களில் எவருக்கேனும் அல்லாஹ் செல்வத்தை வழங்கினால், அவர்முதலில் தனக்கும், பின்னர் தனது வீட்டாருக்கும் செலவு செய்யட்டும், என்று நபிகள் நாயகம் சொல்கிறார். வீட்டார் என அவர் குறிப்பிடுவது, மனைவி, மக்களை ஆகும். ஒருவேளை கணவன், பொருள் தர மறுத்தால் தனக்கும், தன் மக்களுக்கும் அவனுக்கு தெரியாமலேயே நியாயமான அளவு பொருளை எடுத்துக் கொள்ளும் உரிமைகூட மனைவிக்கு வழங்கப்பட்டுள்ளதாக, நாயகத்தின் துணைவியார் ஆயிஷா அம்மையார்தெரிவித்துள்ளார். ஒருமுறை ஹிந்தா என்ற பெண்மணி, நாயகத்திடம் வந்து, என் கணவர் கஞ்சத்தனம் உள்ளவராக இருக்கிறார். அவருக்கு தெரியாத நிலையில், நான் எடுக்கும் பணத்தை தவிர, அவர் எனக்கோ, என் குழந்தைகளுக்கோ போதுமான அளவு பணம் கொடுப்பதுஇல்லை, என முறையிட்டார்.அப்போது நாயகம் அவர்கள் அந்த அம்மையாரிடம், உனக்கும், உன் குழந்தைகளுக்கும் போதுமான பணத்தை நியாயமான அளவு எடுத்துக் கொள்ளலாம், என்றார்.