Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமலிங்க சாமுண்டீஸ்வரி கோவில் ... திருக்கழுக்குன்றத்தில் அறுபத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் 4 முறை தேரோட்டம்: 2015ம் ஆண்டில் புதுமை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஏப்
2015
02:04

நடராஜர் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சிறப்பு தேரோட்டம், மகா தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிதம்பரம், நடராஜர் கோவிலின் மகா கும்பாபிஷேக விழா, வரும் 1ம் தேதி நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், சித்சபையில் இருந்த நடராஜர், தேவசபைக்கு பிரவேசம் செய்யும் நிகழ்ச்சி, கடந்த மார்ச் 8ம் தேதியன்று நடந்தது. வரும் 30ம் தேதியன்று இரவு, தேவசபையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, சித்சபைக்கு நடராஜர் மீண்டும் பிரவேசம் செய்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

வரும் 1ம் தேதியன்று, காலை 7:00 மணிக்கு, மகா கும்பாபிஷேகம் முடிந்தவுடன், சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் கனசபையில் எழுந்தருளுகிறார். இதை தொடர்ந்து, 2ம் தேதி காலை சிறப்பு வழிபாடுகளுக்கு பின், திருத்தேரில் நடராஜர் எழுந்தருள, தேரோட்டம் துவங்குகிறது. மாலையில், தேர் நிலையை வந்தடைகிறது. பின், அஜபா நடனத்துடன், ஆயிரங்கால் மண்டபம் ராஜசபையில் சுவாமி எழுந்தருளுகிறார்.வரும் 3ம் தேதியன்று அதிகாலை 4:00 மணிக்கு, மகா அபிஷேகம், 6:00 மணிக்கு, தங்க காசு சொர்ண அபிஷேகம் நடக்கிறது. மதியம் 2:00 மணிக்கு, நடராஜர் ஆனந்த நடனமாடியபடி, மகா தரிசனம் காட்சியும், சித்சபை பிரவேசமும் நடக்கிறது. இந்த ஆண்டில், கடந்த ஜனவரியில், மார்கழி ஆருத்ராவையொட்டி, தேரோட்டமும், மகா தரிசனமும் நடந்தது. தற்போது, கும்பாபிஷேகத்தையொட்டி, 2வது முறையாக, சிறப்பு தேரோட்டம், மகா தரிசனம் நடப்பது குறிப்பிடத்தக்கது. வருகின்ற ஜூன் மாதத்தில் ஆனி திருமஞ்சனம், டிசம்பர் மாதத்தில் மீண்டும் மார்கழி ஆருத்ரா உற்சவத்தையொட்டி, தேரோட்டம் மற்றும் மகா தரிசனம், என, நடப்பாண்டில் நான்குமுறை தேரோட்டம், மகா தரிசனம் நடக்க உள்ளது தனி சிறப்பாகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: ஆவணி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் அமாவாசை தீர்த்தவாரி நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; ஆவணி அமாவாசை தினத்தையொட்டி கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் விநாயகர் கோயில், சதுர்த்தி விழாவின், 4ம் நாள் ஊர்வலமாக மயில் வாகனத்தில், ... மேலும்
 
temple news
கோவை; போத்தனூர் கணேசபுரம் பகுதியில் அமைந்துள்ள மூரண்டம்மன்  கோவிலில் ஆவணி அமாவாசையை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar