Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிதம்பரம் நடராஜர் கோவிலில் 4 முறை ... திரவுபதி அம்மன் கோவிலில் 8ம் ஆண்டு பூ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கழுக்குன்றத்தில் அறுபத்து மூவர் திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஏப்
2015
02:04

திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் அறுபத்து மூவர் திருவிழா, நேற்று கோலாகலமாக நடைபெற்றது. திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில், இந்து சமய அறநிலைய துறை பராமரிப்பில் உள்ளது. இத்தலத்தில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா, 11 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா, ஏப்., 23ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றுவருகிறது.மூன்றாம் நாள் விழாவான அறுபத்து மூவர் திருவிழாவில், நேற்று காலை, 7:00 மணியளவில் 63 நாயன்மார்களுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, நாயன்மார்கள், 24 பல்லக்குகளில் வேதகிரீஸ்வரர் மலையை வலம் வந்தனர்.அறுபத்து மூவரை தொடர்ந்து, விநாயகர், அதிகார நந்தியில் வேதகிரீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்பாள், முருகர், சண்டிகேஸ்வரர் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், மலை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 24 பல்லக்கில் பவனி வந்த அறுபத்து மூன்று நாயன்மார்களும், அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பின்தொடர்ந்து வந்த சுவாமிகளை பார்த்து வணங்குவது போன்று வலம் வந்தனர். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். அறுபத்து மூன்று நாயன்மார்கள் மலையையும், மாடவீதிகளிலும் உலா வருவது, திருக்கழுக்குன்றத்தில் மட்டும் தான் என்பது சிறப்பு வாய்ந்தது. காலை, 5:00 மணியளவில் துவங்கி, நாள் முழுக்க மலையை வலம் வந்த பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம், மோர் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் அமாவாசை தீர்த்தவாரி நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; ஆவணி அமாவாசை தினத்தையொட்டி கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் விநாயகர் கோயில், சதுர்த்தி விழாவின், 4ம் நாள் ஊர்வலமாக மயில் வாகனத்தில், ... மேலும்
 
temple news
கோவை; போத்தனூர் கணேசபுரம் பகுதியில் அமைந்துள்ள மூரண்டம்மன்  கோவிலில் ஆவணி அமாவாசையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி: சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar