திருவாரூர்: திருவாரூர் அருகே திருக்கண்ணமங்கை பக்தவச்சல பெருமாள் கோவிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நேற்று நடந்த தேரோட்டத்தில் ஆயிர கணக்கானவர்கள் பங்கேற்று தேரிழுத்தனர். திருவாரூர் அருகே திருக்கண்ணமங்கை பக்தவச்சல பெருமாள் கோவிலில் உள்ளது. இக்கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 27 வது தலமாக விளங்குகிறது. இங்கு ஆண்டு தோறும் சித்திரை பிரம்மோற்சவம் வெகு விமர்சியாக நடந்து வருகிறது. இந்த ஆண்டிற்கான விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி சிறப்பு அபிஷேக அலங்கார நிகழ்ச்சி நடந்தது வந்தது. விழாவில் பக்தவச்சல பெருமாள் கோ, ரதம், சூரிய பிரபை, சேஷ வாகனங் களிலும், நேற்று முன் தினம் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா காட்சியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன் பின் பவளக்கால் சப்பர த்தில் வீதியுலாவும் நடந்தது. நேற்று நடந்த தேரோட்டத் தில் ஆயிரகணக் கானவர்கள் பங்கேற்று தேரிழுத்தனர். விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார் எம்பெருமான் ஜீயர் மடத்தின் சார்பில் 100 பேர் ஆண்கள், பெண்கள் பங்கேற்று ததி ஆராதனையை கிருஷ்ண மூர்த்திராமானுஜம் தலையில் கடந்த 10 தினங்களாக நடத்தி வருகின்றனர்.