கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை புனித சூசையப்பர் ஆலய தேர்பவனி நடந்தது. இயேசு சபை சகோதரிகளின் நவநாள் ஜெப நிகழ்ச்சியும், கூட்டுப்பாடல் திருப்பலியும் நடைபெற்றது. தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் வாண வேடிக்கையுடன் புனித சூசையப்பர் நகர்வலம் நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு, தஞ்சை வியாகுலசாமி குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.