Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மாந்தோப்பு அங்காளஈஸ்வரி கோயிலில் ... நூறு ஆண்டுகளுக்கு பின் தஞ்சை பெரிய கோவில் நந்திக்கு நாளை சந்தனக்காப்பு அலங்காரம்! நூறு ஆண்டுகளுக்கு பின் தஞ்சை பெரிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரபாண்டி திருவிழா நாளை துவக்கம் சிறப்பு தரிசனம், வி.ஐ.பி., பாஸ் கிடையாது!
எழுத்தின் அளவு:
வீரபாண்டி திருவிழா நாளை துவக்கம் சிறப்பு தரிசனம், வி.ஐ.பி., பாஸ் கிடையாது!

பதிவு செய்த நாள்

11 மே
2015
11:05

தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நாளை துவங்குகிறது. வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 22ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நாளை முதல் திருவிழா நிகழ்ச்சிகள் துவங்குகிறது. விழா நடக்கும் ஒரு வாரத்தில் தினமும் 2 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்வார்கள். பல ஆயிரம் பேர் அக்னி சட்டி ஏந்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

விரிவான ஏற்பாடுகள்:
கம்பம், சின்னமனூர் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் தெற்கு பகுதியிலும், பெரியகுளம், தேனி போடி பகுதி வாகனங்களுக்கு ஆவின் பூத் அருகே தற்காலிக பஸ் ஸ்டாண்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. கோயில் இடத்தில் பொழுதுபோக்கு ராட்டினம், தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. முடிக்காணிக்கை செலுத்த நபருக்கு ரூ.10க்கு டோக்கன் வழங்கப்படும். 100 நாவிதர்கள் தயார் நிலையில் இருப்பார்கள்.

இந்த ஆண்டு சிறப்பு தரிசனம், தனி வழி கிடையாது. ஆனால் விரைவு தரிசன டிக்கெட் ரூ.20க்கு வழங்கப்படும். வி.ஐ.பி., பாஸ், கார் பாஸ் இல்லை. கோயில் வளாகத்திற்குள் 22 உண்டியல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்கி -டாக்கி: திருவிழா பணியில் ஈடுபடும் 150 பணியாளர்களை 2 கி.மீ., சுற்றளவில் கண்காணித்து உடனுக்குடன் சுகாதாரம், குடிநீர் வசதி மேம்படுத்த "வாக்கி டாக்கி வசதி செய்துள்ளனர். 20 இடங்களில் கண்காணிப்பு காமிரா வசதி செய்யப்பட்டுள்ளது. கோயிலை சுற்றியும், ரோட்டோரத்திலும் 200 தற்காலிக கடைகள் அமைக்கப்படுகிறது. திருவிழா பணியில் ஈடுபடும் பொது சுகாதார பணியாளர்கள், போலீசார், அறநிலையத்துறை ஊழியர்கள் ஆயிரம் பேருக்கு தினமும் மூன்று வேளை உணவு வழங்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக எட்டு நாட்களும் ஆற்றில் 150 கன அடிநீர் திறந்து விடப்படுகிறது. மே 15ம் தேதி வெள்ளிக்கிழமை தேர்த்திருவிழா நடக்கிறது. எனவே அன்று மாவட்டத்தில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar