புவனகிரி ராகவேந்திரர் கோவில் 27ம் ஆண்டு ஏக தின லட்சார்ச்சனை நடந்தது.
புவனகிரி ராகவேந்திரர் கோவில் குட முழுக்கு விழா நிறைவடைந்து 26 ஆண்டுகள் ஆகிறது. தொடர்ந்து 27ம் ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை விழா கோவில் வளாகத்தில் கொண்டாடப்பட்டது.ரகோத்தம ஆச்சார் தலைமையில் 30 ஆச்சார்கள் மிருத்திகா பிருந்தாவனத்திற்கு பால், பஞ்சாமிர்தஅபிஷேகம், மகா தீபாராதனை நடத்தப்பட்டது.
முன்னதாக மிருத்திகா பிருந்தாவனம் முன் சிலை வைக்கப்பட்டு ஏகதின லட்சார்ச்சனை நடந்தது.விழாவில் திரளான பக்தர்கள் சுவாமி செய்தனர். ஏற்பாடுகளை ராகவேந்திரர் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் ராமநாதன், பேராசிரியர் உதயசூரியன், கதிர்வேலு ஆகியோர் செய்திருந்தனர்.