Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருமூர்த்திமலை கோவிலை சூழ்ந்தது ... கரூர் அம்மனுக்கு பூச்சொரியல் விழா கோலாகலம்: பக்தர்கள் பரவசம்! கரூர் அம்மனுக்கு பூச்சொரியல் விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரதராஜ பெருமாள் பாதை அடைப்பு: காஞ்சியில் 100 ஆண்டு வழக்கத்திற்கு தடை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மே
2015
12:05

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செவிலிமேடு ராமானுஜர் கோவிலுக்கு அனுஷ்டான குள உற்சவத்திற்காக, காஞ்சி வரதராஜ பெருமாள் வந்து செல்லும் வழி அடைக்கப்பட்டதால், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த வழக்கம் தடைபடுமோ என, பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர். செவிலிமேடு பகுதியில் உள்ள ராமானுஜர் கோவிலில், ஆண்டுதோறும், மார்கழி மாதம் அனுஷ்டான குளம் உற்சவம் நடைபெறும். இதற்காக ஆண்டுக்கு ஒருமுறை, காஞ்சி வரதராஜ பெருமாள், செவிலிமேடு அருகே உள்ள, சதாசிவம் நகர் வழியாக, ராமானுஜர் கோவிலில் எழுந்தருள்வார். அங்கு சிறப்பு பூஜைக்கு பின், மாலையில் அதே வழியில் கோவிலுக்கு திரும்புவார். நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வந்தது. தவிர, செவிலிமேடு காலனி, இந்திரா நகர், மேட்டு காலனி போன்ற பகுதிவாசிகள், இந்த வழியாக காமாட்சி அம்மன் காலனி, சின்ன காஞ்சிபுரம் போன்ற பகுதிகளுக்கு சென்று வந்தனர். இந்த நிலையில், சதாசிவம் நகரில் கால்வாய் அருகே உள்ள பாதையை மறித்து, கடந்த மாதம் சுவர் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதிவாசிகள் புகார் தெரிவித்து உள்ளனர். எனினும், இதுவரை மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வரதராஜ பெருமாள் சென்று வந்த இந்த பாதை, திடீரென அடைக்கப்பட்டதால், இனி வரும் காலங்களில், வரதராஜ பெருமாள் சென்று வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தனியாருக்கு சொந்தம் எனக் கூறப்படும் இந்த நிலம் மீது, வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, வருவாய் துறை அலுவலரிடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட இடத்தை அளவீடு செய்து பார்த்த பின் தான், நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; தீபாவளிக்கு ராம ஜென்மபூமி தயாராகி வருகிறது, ஸ்ரீ ராமர் மந்திரின் முதல் தளத்திலிருந்து ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar