மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் வைகாசி கிருத்திகை விழா நடந்தது. மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி கோவிலில் வைகாசி மாத கிருத்திகை விழாவை முன்னிட்டு சுவாமிக்கு, நேற்று சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந் தது. மதியம் 12:00 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர், பாலசித்தர், நவகிரக சுவாமிகளுக்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. பின்னர் மூலவர் தங்ககவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மதியம் 1:00 மணிக்கு கோவில் மண் டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 8:00 மணிக்கு உற்சவர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து நடந்த கிரிவலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை மயிலம் ஆதினம் 20 பட்டம் சிவஞான பாலய சுவாமி சிறப்பாக செய்திருந்தார்.