விருத்தாசலம்: அமாவாசையொட்டி, விருத்தாசலம் அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விருத்தாசலம் சந்தைதோப்பு அ ங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று முன்தினம் காலை சித்தி விநாயகர், புற்று மாரியம்மன், அங்காள பரமேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 8:00 மணிக்கு அலங்கரித்த பல்லக்கில் அம்மன் உட்பிரகார உலா, அதைத் தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.