வேதம் படித்து அர்ச்சகர்களாக விரும்புவோர், மயிலாடுதுறை சிவபுரம் வேதசிவாகம பாடசாலையில் சேரலாம். மாணவர்கள் தங்கிப்படிக்க விடுதி வசதி செய்யப்பட்டுள்ளது. வரும் 8ம் தேதி, விடுதியில் கணபதி ஹோமம் நடத்தப்படுகிறது. இந்த கல்வியாண்டில் வேத சிவாகம பாடங்களுடன், ஆங்கிலமும் நடத்தப்படும். மே 22ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை துவங்குகிறது. சேர விரும்புவோர் பாடசாலை முதல்வர் ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியாரை தொடர்பு கொள்ளலாம். அலைபேசி: 94431 26440, 94434 89491.