தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை பெருவிழாவிற்கான பந்தல்கால் முகூர்த்தம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மார் 2026 10:03
தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் சதயவிழா, ஆஷாட நவராத்திரி விழா, சித்திரை பெருவிழா என பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதில், சித்திரை பெருவிழா 18 நாட்கள் நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் இன்று (6ம் தேதி) காலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு பெரியநாயகி அம்மன் சன்னதி வளாகத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பந்தக்காலுக்கு பால், தயிர், மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, பந்தக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் கவிதா, கண்காணிப்பாளர் ரவி, செயல் அலுவலர் சத்யராஜ் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.