Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அமெரிக்காவில் காத்து கிடக்கும் ... எறும்பீஸ்வரர் கோவிலில் 31ம் தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரூர் மாரியம்மன் திருவிழாவில் அலகு குத்தி நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2015
12:05

கரூர்: கரூர், மாரியம்மன் கோவில் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் நிகழ்ச்சி நாளை மாலை, 5.15 மணிக்கு நடக்கிறது. கரூர் மாரியம்மன் கோவிலில் கடந்த, 10ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா துவங்கியது. அதை தொடர்ந்து பூச்சொரிதல் விழா, காப்புக்கட்டுதல் நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில், நேற்று அதிகாலையில் இருந்து, ஐந்து ரோடு அமராவதி ஆற்றங்கரை, வஞ்சியம்மன் கோவில் தெரு அமராவதி ஆற்றங்கரையிலிருந்து அக்னி சட்டி, பால்குடம், காவடி எடுத்து, குழந்தையை தொட்டில் கட்டியும், தீர்க்குடம் எடுத்து வந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். நூற்றுக்கணக்கான பக்தர்களும் பல விதமான அலகுகளை குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாவிளக்கு படைத்து வழிபாடு நடத்தினர். நேற்று காலை முதல், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாரை சாரையாக நீண்ட வரிசையில் கோவிலுக்கு சென்று, அம்மனை வழிபாடு செய்தனர். வழிபாடு குழுவினர் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் நாளை மாலை, 5.15 மணியளவில் நடக்கிறது. தொடர்ந்து, புஷ்பம், கருடன், மயில், கிளி, வேப்ப மரம், பின்ன மரம், புஷ்பம், பஞ்ச பிரகாரம், புஷ்ப பல்லக்கு, மாரியம்மன் பல்லக்கு ஆகிய வாகனங்களில் நாள்தோறும் ஒன்றில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar