Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் ரூ.3. 25 கோடியில் ... அமர்நாத்துக்கு ஆறாவது குழு பயணம்! அமர்நாத்துக்கு ஆறாவது குழு பயணம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயில் சிலைகளில் பெரிய அளவிலான சேதம் இல்லை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2011
10:07

ராமநாதபுரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சிலைகளில் பெரியளவிலான சேதங்கள் ஏதும் இல்லை, என இந்து அறநிலையத்துறை முதன்மை ஸ்தபதி முத்தையா கூறினார். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சேதமடைந்த சுவாமி சிலையை சரி செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் ராமேஸ்வரம் பட்சி சிவராஜன் மனுத்தாக்கல் செய்திருந்தார். சேதமுற்ற சிலையை நான்கு மாதங்களுக்குள் சரி செய்ய கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து இந்து அறவிலையத்துறை முதன்மை ஸ்தபதி முத்தையா, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தார். சுவாமி சன்னதி அருகே சோமஸ்கந்தர் சன்னதியில் சேதமடைந்த செம்பிலான விநாயகர், சுப்பிரமண்யசுவாமி, சோமஸ்கந்தர், பர்வதவர்த்தினி அம்மன், அதிகார நந்திகேசுவரர், பெருமாள் சமேத திருவாச்சி உள்ளிட்ட சிலைகள் மற்றும் சேதமடைந்த பளபளப்பு இல்லாத தங்கம், வெள்ளி வாகனங்களை ஆய்வு செய்தார். இவர் கூறியதாவது: ராமேஸ்வரம் கோயில் சிலைகள், சுவாமி வாகனங்களை ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவிட்டதின்பேரில் ஆய்வு செய்தேன். சிலைகளில் லேசான சேதங்கள் மட்டுமே உள்ளன. பெருமாள் சமேத பூதேவி சிலையில் வலது கை உடைந்துள்ளதால் பூஜைக்கு ஏற்றதல்ல. விரைவில் புதிய சிலைகள் அமைக்க அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சிலைகளில் தலை, கை உள்ளிட்ட உடல் உறுப்புகளில் சேதம் இருந்தால்தான் பூஜை செய்யக்கூடாது. தங்கம், வெள்ளி தேர் பாலிஷ் செய்து புதுப்பிக்க பரிந்துரைக்கப்படும். சுவாமி சன்னதியில் 20 கிலோ 700 கிராம் எடையிலான தங்க சிலையில் சேதமடைந்த திருவாச்சி மற்றும் பரசு ஆயுதம் சரிசெய்யப்படும். வடக்கு தெற்கு கோபுர உட்பட அனைத்து சீரமைப்பு பணிகளும் முடிந்தபின் கும்பாபிஷேகம் நடத்தப்படும். எனது ஆய்வறிக்கையை இந்து அறநிலையத்துறை கமிஷனரிடம் அளிப்பேன். அவரது உத்தரவின்படி பணிகள் மேற்கொள்ளப்படும், என்றார். கோயில் இணை கமிஷனர் ராஜமாணிக்கம், உதவி கோட்டபொறியாளர் மயில்வாகனன் ஆகியோர் உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கரிங்கரைப்புள்ளி காடாங்கோடு பகவதி அம்மன் கோவில் பிரதிஷ்டை தின உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; அஷ்டமி பூப்பிரதட்சனம் யொட்டி ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், உலக சாதனை முயற்சியாக, 900க்கும் மேற்பட்ட நாட்டிய ... மேலும்
 
temple news
கூடலுார்; கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் கூடாரவல்லி திருவிழா வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை சாரல் மலையில் சாலைகளில் பாதுகாப்புக்கு இன்றி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar