Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாஷபுரீஸ்வரர் கோவிலில் இன்று ... ஆதிவாசிகள் பாரம்பரிய நடனம் வனதேவதை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எல்லை மாரியம்மன் கோவில் விழா; ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2015
12:05

ராசிபுரம் : ராசிபுரம் எல்லை மாரியம்மன் கோவில் விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர், குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ராசிபுரத்தில், பிரசித்தி பெற்ற எல்லை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி மாதம், குண்டம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, கடந்த, 18ம் தேதி துவங்கியது. தொடர்ந்து ஸ்வாமிக்கு, சிறப்பு அபிஷேகம், அம்மன் திருவீதி உலா வருதல், திருக்கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.

மேலும், தீர்த்தவாரி, பூந்தட்டு ஊர்வலம், பூச்சாட்டுதல், கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல், அம்மை அழைத்தல், சக்தி அழைத்தல், பொங்கல் வைத்தல் மற்றும் விளையாட்டு போட்டிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.ராசிபுரம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள், செல்லியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம், பூங்கரகம், அக்னி சட்டி எடுத்தும், விமான அலகு குத்தியும் அம்மனுக்கு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். நேற்று காலை, 8 மணிக்கு, சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், புனித நீராடி ஊர்வலமாக வந்து கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி, அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இன்று (மே, 29) அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், திருவிளக்கு பூஜை, மஞ்சள் நீராட்டு விழா, அம்மன் சத்தாபரணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து, நாளை (மே, 30) அதிகாலை, 2 மணிக்கு கம்பம் பிடுங்குதல், சிறப்பு அபிஷேகம், மறு பூஜையும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கர்நாடக மாநிலம், தார்வாட்டில் சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.,22ல் துவங்கி அக்.,27 சூரசம்ஹாரம், அக்.,28ல் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் செல்வ விநாயகர் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி பூசம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் சின்னம்மாள் வீதியில் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், புரட்டாசி மாத செவ்வாய் கிழமையான நேற்று, சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar