Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநிகோயிலில் பால்குடங்களுடன் ... திருத்தளிநாதர் சன்னதியில் ருத்ராட்ச விதானம்! திருத்தளிநாதர் சன்னதியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாடலீஸ்வரர் கோவில் தேரோட்டம்: பக்தர்கள் குவிந்தனர்!
எழுத்தின் அளவு:
பாடலீஸ்வரர் கோவில் தேரோட்டம்: பக்தர்கள் குவிந்தனர்!

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2015
10:06

கடலூர்: கடலூர், பாடலீஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் வைகாசிப் பெருவிழாவில் 9ம் நாளான நேற்று காலை நடந்த தேரோட்டத்தில் ஆயி  ரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கடலூர், திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலமான பாடலீஸ்வரர் கோவிலில் வைகசி   பெருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் சுவாமிக்கு காலை மற்றும் மாலையில் சிறப்பு அபி÷  ஷகம் மற்றும் பூஜையைத் தொடர்ந்து இரு வேளையும் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. ஒன்பதாம் நாளான நேற்று தேர் திருவிழா நடந்தது. அதனையொட்டி நேற்று காலை 6:00 மணிக்கு பாடலீஸ்வரர், பெரியநாயகிக்கு சிறப்பு பூஜை மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு தீபாராதனை   நடைபெற்றது. யாத்ரா தானத்தைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் கோவிலை வலம் வந்து யாக சாலையில் தீபாராதனை நடந்தது. பின்னர், கோவில் முன்   உள்ள மண்டபத்தில் பாடலீஸ்வரர், பெரியநாயகிக்கு சிறப்பு பூஜை செய்து, மாலை பட்டு சாற்றி தீபாராதனை நடந்தது. 9:00 மணிக்கு வேதமந்திர  ங்கள் முழங்கி, இன்னிசை இசைக்க பெரியநாயகி சமேதராக பாடலீஸ்வரர் ஊர்வலமாக தேரடிக்கு வந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தரு  ளினார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் சரண கோஷம் எழுப்பி வணங்கினர். தீபாராதனையைத் தொடர்ந்து காலை 9:40 மணிக்கு பக்தர்கள்   வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் துவங்கியது. பகல் 1:10 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது. மாலை 6:00 மணிக்கு கோவில் குளக்கரையில்   திருவிளக்கு பூஜை நடந்தது. மாலை 7:00 மணிக்கு பெரியநாயகி சமேத பாடலீஸ்வரர் தேரிலிருந்து இறங்கி மண்டகப்படி பூஜை நடந்தது. இரவு 8:30   மணிக்கு பஞ்சமூர்த்திகள் கோவிலை சென்றடைந்தனர். பூஜைகளை நாகராஜ குருக்கள், சிவா மற்றும் ராக்கேஷ் குருக்கள் நடத்தினர். தேர் திரு  விழாவையொட்டி, டி.எஸ்.பி., ராமமூர்த்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; பெரியநாயக்கன்பாளையம் குப்பிச்சிபாளையம்ரோட்டில் இருக்கும் பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
குரோதி ஆண்டு சித்திரை 18 (மே1, 2024) மாலை 5:21 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குருபகவான் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் தலத்தெரு தங்க மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயிஅம்மன் கோயிலில் நேற்று கொடியேற்றத்துடன் வசந்தப் பெருவிழா ... மேலும்
 
temple news
செந்துறை, செந்துரை அருகே சேத்தூர் செல்வமுத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar