Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஆண்டுக்கு ஒருமுறை திறக்கப்படும் ... உலகளந்த பெருமாள் வசந்தோற்சவ விழாவில் கருடசேவை! உலகளந்த பெருமாள் வசந்தோற்சவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகர்கோவிலில் தயாராகுது புதிய தேர்: ஆடியில் தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
அழகர்கோவிலில் தயாராகுது புதிய தேர்: ஆடியில் தேரோட்டம்!

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2015
11:06

அழகர்கோவில்: அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் உபயதாரர் வழங்கிய ரூ.90 லட்சத்தில் புதிய தேர் செய்யும் பணிகள் முடிந்து   விட்டதால் ஆனியில் வெள்ளோட்டமும், ஆடியில் தேரோட்டமும் நடக்கிறது. இக்கோயில் ஆடித் தேரோட்டம் தனிச்சிறப்பு பெற்றது. தற்போதுள்ள   தேர் 300 ஆண்டுகள் பழமையானது. மலைப் பாதையில் ஆடி, அசைந்து ஓடியதில், தேரில் இருந்த பல சிற்பங்கள் சிதைந்து விட்டன. தேரும் ஆட்டம்   கண்டு விட்டது. தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி வரதராஜன் ஆகியோரின் முயற்சியால் மதுரை பக்தர் ஒருவர் ரூ.90 லட்சத்தில் புதிய தேர்   செய்து கொடுக்க முன்வந்தார். பணிகள் துவங்கப்பட்டு, தேர் செய்வதற்கான தேக்கு, வேங்கை மரங்கள் மியான்மர் நாட்டில் இருந்து இறக்குமதி   செய்யப்பட்டன. பொன்னமராவதி ஸ்தபதி செல்வம் தலைமையில் 15 பேர், தேர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேரில் பெருமாளின் பல்வேறு   அவதாரங்கள் மற்றும் மாதவன், கேசவன், ரதி, மன்மதன், மன்னர் திருமலை நாயக்கர், பூதங்கள், கஜேந்திர மோட்சம், சிற்பங்கள் செதுக்கப்  படுகின்றன. ஸ்தபதி செல்வம் கூறியதாவது: புதிய தேர் 5 நிலைகள் கொண்டவை. ஒவ்வொரு நிலையின் கீழ் பகுதியில் 124, மேலே 62 சிற்பங்கள்   என 500க்கும் மேற்பட்ட சிற்பங்கள் பொருத்தப்படுகின்றன. சிற்பங்கள் அனைத்தும் பெருமாளின் அவதாரங்களையும், கோயிலில் நடைபெறும் தி  ருவிழாக்களையும் மையமாக வைத்து நுணுக்கமாக கை வேலைப்பாடுகளால் செய்யப்பட்டுள்ளன என்றார். கோயில் நிர்வாகம் தரப்பில் கூறிய  தாவது: 90 சதவீத பணிகள் முடிந்து விட்டன. சக்கரங்கள் மட்டும் பழைய தேரில் இருந்த  ஹைட்ராலிக் சக்கரங்களை வைத்துள்ளோம். ஆனியில்   வெள்ளோட்டம் விட அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். வெள்ளோட்டம் முடிந்ததும் ஆடியில் புதிய தேரோட்டம் நடக்கும்.  கண்ணாடி கூண்டில்   பழைய தேரை பக்தர்கள் பார்க்கும் வகையில் பாதுகாக்கப்படும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்: குடியரசு தின விழாவையொட்டி,சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பொது ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் நாட்டார்கள் காவடிக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு ... மேலும்
 
temple news
 பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ... மேலும்
 
temple news
அவிநாசி: ரதசப்தமி விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார், ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: ஜன. 26–: ஊத்துக்கோட்டை அருகே கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழாவை ஒட்டி, உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar