திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் வசந்தோற்சவ விழாவில் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா நடந்தது. திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் கடந்த 28ம் தேதி வசந்தோற்சவ விழா துவங்கியது. விழாவின் நிறைவாக நேற்று கருடசேவை நடந்தது. காலை 6:00 மணிக்கு கருட வாகனத்தில் பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி வீதியுலா நடந்தது. தொடர்ந்து 10: 00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாளுக்கு திருமஞ்சனம் சாற்றுமறை நடந்தது. இரவு 7:00 மணிக்கு புஷ்பவல்லி தாயார் சமேத ஸ்ரீ தேகளீச பெருமாள் ஊஞ்சல் சாற்றுமுறை நடந்தது. வசந்தோற்சவ விழா நிறைவடைந்ததையடுத்து, இன்றுமுதல் மூன்று நாட்களுக்கு புஷ்பவல்லி தாயாருக்கு பூச்சாத்து உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் நிர்வாகத்தினர் செய்து வரு கின்றனர்.