Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூத்தாண்டவர் கோவிலில் ... மாதா நவநாள் திருவிழா! மாதா நவநாள் திருவிழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேதுக்கரை ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயிலில் இடிந்து கிடக்கும் அர்த்த மண்டபம்!
எழுத்தின் அளவு:
சேதுக்கரை ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயிலில் இடிந்து கிடக்கும் அர்த்த மண்டபம்!

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2015
12:06

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் சேதுக்கரையில் உள்ள ஸ்ரீனீவாசப் பெருமாள் கோயிலின் அர்த்த மண்டபம் இடிந்து விழுந்து விட்டது. இதை  காணும் வெளியூர் பக்தர்கள் வேதனைப் படுகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வைணவத் திருக் கோயில்களில் ஒன்று திருப்புல்லாணி  அருகே சேதுக்கரை கடற்கரைக்கு செல்லும் வழியில் உள்ள ஏகாந்த ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயில். ‘சின்னக்கோயில்’ என்றழைக்கப்படும் இக்÷ காயில் வெளியே தெரியப்படாமல் மரங்களாலும், புதர்களாலும் மறைக்கப்பட்டு, மூல ஸ்தான கோபுரக்கலசங்கள், கருவறை, முன்மண்டபம், அர்த்த  மண்டபம், சிற்பத்துõண்கள் பராமரிப்பின்றி கிடக்கின்றன. 

மழை, வெயிலால் பாதிக்கப்பட்டுள்ள இக்கோயில் குறித்து ‘தினமலர்’ நாளிதழில் கடந்த  ஜன.,17 ல் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக ராமநாதபுரம் உழவாரப் பணிக் குழுவினர் கோயிலை சுத்தம் செய்தனர்.  இந்நிலையில்,  கடந்த வாரம் பெய்த கோடை மழையால், கோயின் கருவறை மற்றும் அர்த்த மண்டபத்தின் பின்பகுதி முழுமையாக இடிந்து விழுந்து சேதமடைந்து  கிடக்கிறது.  இதுகுறித்து திருக்கோஷ்டியூரை சேர்ந்த பட்டாச்சாரியார் ஒருவர் கூறுகையில், “இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதா தேவியை  மீட்க, இங்கிருந்து தான் இலங்கைக்கு கடலில் பாலம் கட்டப்பட்டதாக ராமாயண காவியத்தில் கூறப்படுகிறது. சேதுக்கரை கடற்கரையில் தான் ராவணனின் தம்பி விபீஷணன் ராமபிரானிடம் சரணடைந்தார்.  அத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலின் தற்போதைய நிலையை காணும்÷ பாது, கண்ணீர் வருகிறது. இந்துசமய அறநிலையத்துறை, சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் பூர்வாங்கப் பணிகளை  துவங்கி, இக்கோயிலை  புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த வழி காண வேண்டும்,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
சென்னை; சென்னை மயிலாப்பூரில் உள்ள வேதாந்த தேசிகர் மண்டபத்தில் நாட்டு நலனுக்காக ‘ஸ்ரீ வித்ய கோடி ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; முருகனின் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம், பழநி திருஆவினன்குடி கோயில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar