ஆலங்குடி குரு கோவிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு லட்சார்ச்சனை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூன் 2015 05:06
திருவாரூர்: நீடாமங்கலம் அருகே ஆலங்குடி குருபகவான் கோவிலில் அடுத்தமாதம் நடைபெறும் குருபெயர்ச்சியை முன்னிட்டு நடக்க உள்ள இலட்சார்ச்ச னையில் பங்கேற்க பரிகார ராசியிர் கோவில் நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம். திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே ஆலங்குடி குருபகவான் கோவி லில் ஆண்டு தோறும் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டிற்கான குருப்பெயர்ச்சி ஜூலை 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. அருள்மிகு குருபகவான் கடகராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பிரவேசிக்கிறார். அதனைத் தொடர்ந்து ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், மகரம் மற்றும் மீன ராசியினர் லட்சர்சனையில் பங்கேற்பது அவசியமாகும். இதற்கான லட்ச அர்ச்சனை கோவில் வளாகத்தில் வரும் 21 ம் தேதி முதல் 28 தேதி குரு பெயர்ச்சிக்கு முன்னும், ஜூலை 9 ம் தேதி முதல் 15ம் தேதி வரை குரு பெயர்ச்சிக்குப் பின்னும் காலை 9.00 மணி முதல் பகல் 12 மணி வரை யும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெறுகிறது. இலட்ச அர்ச்சனையில் பங்கேற்க விரும்பும் பரிகார ராசியினர் மேலும் விப ரங் களுக்கு கோவில் செயல் அலுவலரை 9442087505 மற்றும் 9787273012 எண் ணில் தொடர்பு கொள்ளலாம்.