செஞ்சி: செஞ்சி தாலுகா வாணிய வைசியர் சங்கம் சார்பில் சிங்கவரம் ரங்கநாதருக்கு வைகாசி விசாகத்தை முன்னிட்டு கருட சேவை உற்சவம் நடத்தினர். செஞ்சி தாலுகா வாணிய வைசியர் சங்கத்தினர் வைசாசி விசாகத்தை முன்னிட்டு சிங்கவரம் ரங்கநாதருக்கு கருட சேவை உற்சவம் நடத்தினர். இதை முன்னிட்டு தாயாரம்மாள், பூதேவி, ஸ்ரீதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தனர். மாலை 6 மணிக்கு ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளினர். ஊர்வலம் சிங்கவரம், செஞ்சி கடை வீதி வழியாக நடந்தது. அப்போது செண்டை மேளம், வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். விழா ஏற்பாடுகளை செஞ்சி தாலுகா வாணியர் வைசியர் சங்கத்தினர் செய்திருந்தனர். ஊர்வலத்தில் பல்வேறு ஊர்களை சேர்ந்த பாகவத கோஷ்டியினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.