Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லலிதா செல்வாம்பிகை கோவிலில் வைகாசி ... சிங்கவரம் ரங்கநாதருக்கு கருட சேவை உற்சவம்! சிங்கவரம் ரங்கநாதருக்கு கருட சேவை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா துவக்கம்!

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2015
11:06

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவில் மகாகும்பாபிஷேக விழா இன்று, முளைப்பாரி, தீர்த்தக்குடங்கள் ஊர்வலத்துடன் துவங்குகிறது. காரமடை அரங்கநாதர் கோவிலில், அரசு மற்றும் உபயதாரர் நிதியுதவியுடன், இரண்டு கோடி ரூபாய் செலவில் ஏழுநிலை ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நான்கு கோடி ரூபாய் செலவில், புதிய மண்டபங்களும், கோபுரங்களுக்கு வர்ணம் பூசப்பட்டது. மொத்தம், ஆறு கோடி ரூபாய் செலவில், கோவிலில் ஆன்மிக திருப்பணிகள் நடக்கின்றன.இதன் மகாகும்பாபிஷேகம் வரும், 7ம் தேதி நடைபெற உள்ளது. இன்று முளைப்பாரி மற்றும் தீர்த்தக்குடங்கள் ஊர்வலத்துடன், கும்பாபிஷேக விழா துவங்குகிறது. மாலை, 3:00 மணிக்கு பெட்டத்தம்மன் மலை அடிவாரத்தில் இருந்து, கோவை மெயின் ரோடு வழியாக கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட உள்ளது. இந்த ஊர்வலத்தில் யானை, குதிரை, பசு மாடு ஆகிய விலங்குகள் முன்னே நடந்து வர, அதன் பின்னால், மேள வாத்தியங்கள் முழங்க நாட்டுப்புற நடனங்கள், படுக நடனம் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. 4ம் தேதி காலை, 9:00 மணிக்கு மகா சுதர்ஸன ஹோமும், இரவு, 7:00 மணிக்கு முதல்கால யாக பூஜையும், சாற்றுமுறையும் நடைபெற உள்ளது. வரும், 5ம் தேதி காலை, 9:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், சதுஸ்தான பூஜையும், இரவு, 7:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜையும் நடக்கிறது. 6ம் தேதி காலை, 10:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும், அஷ்டபந்தன மருந்து சாற்றுதலும், மாலையில் விமான கோபுர கலசங்கள் நிறுவுதலும், மாலை, 5:00 மணிக்கு ஐந்தாம் கால யாக பூஜையும் நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை (7ம் தேதி) காலை, 6:00 மணிக்கு ஆறாம் கால யாக பூஜையும், மஹாபூர்ணாஹுதியும் நடக்கிறது. தொடர்ந்து, 8:30 மணிக்கு யாகசாலையிலிருந்து தீர்த்தக் குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. 9:15 மணியிலிருந்து, 9:45 வரை ராஜகோபுரம் உட்பட அனைத்து கோபுரங்களுக்கு மகாகும்பாபிஷேகம் நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை தக்கார் மற்றும் உதவி ஆணையர் ஜீவானந்தம், கோவில் செயல் அலுவலர் நந்தகுமார் மற்றும் அர்ச்சகர்கள், கோவில் ஊழியர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி புரட்டாசி பிரமோற்ஸவ நிறைவை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை அருகே கிடைத்த அழகிய தீர்த்தங்கரர் சிற்பம் சுமார் 1100 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே குட்டூர் உண்ணாமுலை அம்மன் உடனுறை அண்ணாமலையார் கோவிலில் நத்தம் சிவனடியார்கள் ... மேலும்
 
temple news
மதுரை; மதுரை, கூடலழகர் கோவிலில் புரட்டாசி பௌர்ணமியை  முன்னிட்டு பாலாபிஷேக கட்டளை சார்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar