Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகர்கோவில் கும்பாபிஷேகம் யாகசாலை ... 12 ஆண்டுகளுக்கு பின் எருதுகட்டு திருவிழா! 12 ஆண்டுகளுக்கு பின் எருதுகட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதில் அன்னதான திட்டத்தின் புதிய கட்டடம் இன்று திறப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2011
10:07

நகரி : திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க திருமலைக்கு வரும் பக்தர்களின் உணவு வசதிக்காக, திருப்பதி தேவஸ்தானம் சார்பில், திருமலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அன்னதான வளாகத்தை, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் இன்று திறந்து வைக்கிறார்.

பக்தர்களின் உணவு பிரச்னையை கவனத்தில் கொண்ட திருப்பதி தேவஸ்தானம், இலவசமாக உணவு வழங்கும் திட்டம் ஒன்றை துவக்கியது. 1985ம் ஆண்டு ஏப்ரல் 6ல், திருமலையில் இலவச நித்ய அன்னதான திட்டம் தொடங்கப்பட்டு, கடந்த 25 ஆண்டுகளாக இடைவிடாமல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அப்போது, தினமும் 2,000 பக்தர்களுக்கு மட்டும் உணவு வழங்க முடிவு செய்யப்பட்டு படிப்படியாக விஸ்தரிக்கப்பட்டது. இத்திட்டம் மூலம் முதலில் கோவிலில் சாமி தரிசனம் செய்து திரும்பும் பக்தர்களின் உணவு வசதிக்காக, கோவிலின் உள்ளே சில மணி நேரங்கள் மட்டும் இலவச உணவு டோக்கன் வழங்கப்பட்டு வந்தது. இலவச உணவு திட்டத்திற்கு ஏராளமான தொழிலதிபர்களும், பக்தர்களும் பெருமளவில் தொடர்ந்து நிதி உதவி செய்து வருவதால், தற்போது நித்ய அன்னதான டிரஸ்டின் கணக்கில், 275 கோடி ரூபாய் டெபாசிட் தொகையாக வைக்கப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் வட்டித் தொகை மூலம் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை தினமும் 12 மணி நேரம் பக்தர்களுக்கு இடைவிடாமல் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. தற்போதுள்ள உணவு வளாகத்தில், அதிக அளவிலான பக்தர்கள் உணவு சாப்பிட வசதியில்லை. இதனால், நேரத்திற்கு சாப்பிட முடியாமல் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். பக்தர்களின் இந்த சிறிய குறையை போக்க, 32 கோடி ரூபாய் செலவில், புதிய அன்னதான வளாகம் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஒரே நேரத்தில், வட மாநில பக்தர்களின் வசதிக்காக ரொட்டி, சப்பாத்தி போன்ற உணவுகளை வழங்கும் திட்டமும் தொடங்கப்பட உள்ளது. "தரிகொண்டா வெங்கமாம்பா தாயார் நித்ய அன்னதான வளாகம் என பெயரிடப்பட்டுள்ள இக்கட்டடத்தை, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் இன்று திறந்து வைக்கிறார். அவர் இங்கு தனது குடும்பத்தினருடன் உணவு அருந்தவும் விருப்பம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பதவி ஏற்றுக்கொண்ட பின்னர் முதன் முதலாக, 2008 ஜூலை 7 அன்று திருமலைக்கு வந்திருந்து, ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலை தொடங்கி வைத்தார். அன்று தனது திருமண நாளையும் கொண்டாடும் விதத்தில் வெங்கடேச பெருமாளை குடும்பத்தாருடன் தரிசனம் செய்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரளா மாநிலம், பாலக்காடு நகரின் அருகேயுள்ளது புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா வரும் 13ல் ... மேலும்
 
temple news
திருவாரூர்: பங்குனி வெள்ளியை முன்னிட்டு விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் மதுரபாஷினி அம்பாளுக்கு ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar