Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பொயனப்பாடிகோவில் தேர்த் திருவிழா! ராமேஸ்வரம் விவேகானந்தர் மண்டபத்தில் சோலார் மின் விளக்குகள்! ராமேஸ்வரம் விவேகானந்தர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மலைக்கோயிலில் நவீன தொழில்நுட்ப வடிவமைப்பில் 2வது ரோப்கார்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2015
12:06

பழநி: பழநி மலைக்கோயிலில் 2வது ரோப்கார் வெளிநாட்டு நவீன தொழில் நுட்பத்தில் அமைப்பதற்கான டெண்டர் விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. பழநிமலைகோயிலுக்கு பக்தர்கள் எளிதாக செல்ல வின்ச்-கள், ரோப்கார் உள்ளது. முதல் ரோப்கார் 2004 நவம்பர் முதல் இயக்கப்படுகிறது. இதற்கு பக்தர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் இரண்டாம் ரோப்காரை ரூ.20 கோடி செலவில் நிறுவ முடிவுசெய்துள்ளனர். இது ஒரு மணி நேரத்தில் 800 பக்தர்கள் செல்லும் வகையில் வெளிநாட்டு நவீன தொழிநுட்பத்துடன் அமைக்கப்பட உள்ளது. இதற்காக மின்வாரிய தலைமை பொறியாளர், பழநி கோயில் இணை ஆணையர், நிர்வாக பொறியாளர், ரோப்கார் நிபுணர், திண்டுக்கல் மாவட்ட மின் ஆய்வாளர் உள்ளிட்ட 11 பேர் கொண்ட ரோப்கார் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இக்கமிட்டியின் ஆலோசனையின் பேரில் இரண்டாவது ரோப்காருக்கான உலகளாவிய (குளோபல்) டெண்டர் கோரப்பட்டு, பிரான்ஸ், ஆஸ்திரியா போன்ற வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.  2வது ரோப்கார் டெண்டர் விதிமுறைகள் மற்றும் வடிவமைப்பு முறை குறித்து நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கமிட்டி உறுப்பினர்கள் இந்துசமய அறநிலைத்துறை தலைமைபொறியாளர் பாலசுப்ரமணியன், பழநிகோயில் இணை ஆணையர்(பொ) ராஜமாணிக்கம், சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் சுந்தர்ராஜன், அண்ணாபல்கலை பேராசிரியர் கருணாமூர்த்தி மற்றும் இந்தியா, மற்றும் வெளி நாட்டை சேர்ந்த ரோப்வே நிறுவன ஏஜென்ட்கள் கலந்துகொண்டனர். அவர்களிடம் 2வதுரோப்கார் எவ்விதம் அமைக்கவேண்டும், அதன் செலவுவிபரம் மற்றும் டெண்டர் விதிமுறைகள் குறித்து கமிட்டியினர் விளக்கமளித்தனர். கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், 2வது ரோப்கார் டெண்டர் விண்ணப்பித்துள்ள நிறுவனங்களின் சந்தேகங்களை விளக்குவதற்காக விதிமுறை ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கோமா நிறுவன ஏஜென்ட் கலந்துகொண்டார். விரைவில் அனுபவம் வாய்ந்த நிறுவனத்திற்கு டெண்டர் விடப்படும். தற்போதைய ரோப்காரில் பராமரிப்பு பணிகள் வேகமாக நடக்கிறது. 10 நாட்களில் பக்தர்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்பட உள்ளது,என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அக்னி நட்சத்திரம் தொடங்கி இரண்டாவது நாளில் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ... மேலும்
 
temple news
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு  இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி ... மேலும்
 
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் அழகர்கோவில் புறப்பட்டார் ... மேலும்
 
temple news
அன்னூர்: கதவுகரை, பகவதி அம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா நேற்று நடந்தது.கதவுகரையில், 250 ஆண்டு பழமையான ... மேலும்
 
temple news
அவிநாசி:  அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிவாச்சாரியார்கள் சமூகம் சார்பில் மஞ்சள் நீர் உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar