பதிவு செய்த நாள்
09
ஜூன்
2015
04:06
கடன் வாங்கி விட்டு திணறுபவர்கள், கடனே இல்லாமல் காலத்தை நிம்மதியாகக்கழிக்க வேண்டுமென விரும்புபவர்கள் மதுரை சுந்தரேஸ்வரரை நினைத்து இந்த பதிகத்தைப் பாடலாம். இதை நமக்குத் தந்தவர் ஞானசம்பந்தர்.வேத வேள்வியை நிந்தனை செய்து உழல்ஆதம் இல்லி அமணொடு தேரரை வாதில் வென்ற அழிக்கத் திருவுள்ளமே?பாதி மாதுடன் ஆய பரமனே.ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்ஆலவாயில் உறையும் எம் ஆதியே.வைதிகத்தின் வழி ஒழுகாத அக்கைதவம் உடைக் கார் அமண் தேரரைஎய்தி, வாது செயத் திருவுள்ளமே?கைதிகழ் தரு மாமணி கண்டனே,ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்ஆலவாயில் உறையும் எம் ஆதியே.மறை வழக்கம் இலாத மாபாவிகள்பறி தலைக் கையர், பாய் உடுப்பார்களைமுறிய வாது செயத் திருவுள்ளமே?மறி உலாம் கையில் மா மழுவாளனே, ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்ஆலவாயில் உறையும் எம் ஆதியே.அறுத்த அங்கம் ஆற ஆயின நீர்மையைக்கறுத்த வாழ் அமண் கையர்கள் தம்மொடும்செறுத்து, வாது செயத் திருவுள்ளமே? முறித்த வாண் மதிக் கண்ணி முதல்வனே.ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்ஆலவாயில் உறையும் எம் ஆதியே.அந்தணாளர் புரியும் அருமறைசிந்தை செய்யா அருகர் திறங்களைச்சிந்த, வாது செயத் திருவுள்ளமே?வெந்தநீறு அது அணியும் விகிர்தனே.ஞாலம் நின் புகழேமிக வேண்டும், தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே.வேட்டு வேள்வி செயும் பொருளை விளிமூட்டு சிந்தை முருட்டு அமண் குண்டரைஓட்டி வாது செயத்திருவுள்ளமே?காட்டில் ஆனை உரித்த எம் கள்வனே.ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்ஆலவாயில் உறையும் எம் ஆதியே.அழல் அது ஓம்பும் அருமறையோர் திறம்விழல் அது என்னும் அருகர் திறத்திறம்கழல, வாது செயத் திருவுள்ளமே?தழல் இலங்கு திருவுடைச் சைவனே.ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்ஆலவாயில் உறையும் எம் ஆதியே.நீற்று மேனியர் ஆயினர் மேல் உற்றகாற்றுக்கொள்ளவும் நில்லா அமணரைத்தேற்றி, வாது செயத் திருவுள்ளமே? ஆற்ற வாள் அரக்கற்கும் அருளினாய்,ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்ஆலவாயில் உறையும் எம் ஆதியே.நீலமேனி அமணர் திறத்து நின்சீலம் வாது செயத் திருவுள்ளமே?மாலும் நான்முகனும் காண்பு அரியதோர்கோலம் மேனியது ஆகிய குன்றமே,ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே.அன்று முப்புரம் செற்ற அழக நின்துன்று பொற்கழல் பேணா அருகரைத்தென்ற வாது செயத் திருவுள்ளமே?கன்று சாக்கியர் காணாத் தலைவனே,ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்ஆலவாயில் உறையும் எம் ஆதியே.கூடல் ஆலவாய்க் கோனை விடைகொண்டு வாடல் மேனி அமணரை வாட்டிட,மாடக் காழிச் சம்பந்தன், மதித்த இப்பாடல் வல்லவர்,பாக்கிய வாளரே.