Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குட்டகரை மாரியம்மன் கோவில் ... பாரியூர் கோவில் உண்டியலில் ரூ.7.15 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பசுபதீஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தில் வளர்ந்த செடிகளை அகற்ற வேண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2015
12:06

கரூர்: ""கரூர் நகரில் நடுநாயகமாக விளங்கும் பசுபதீஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும், என்று, திருக்குறள் பேரவை செயலாளர் பழனியப்பன் தெரிவித்தார். திருக்குறள் பேரவை செயலாளர் பழனியப்பன், கூறியதாவது, கரூரில் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் மிகவும் தொன்மையான கோவிலாகும். இக்கோவில் முசுகுந்த சக்கரவர்த்தியால் திருப்பணி செய்யப்பட்ட கோவிலாகும். இதன் முன்புறம் ஏழு நிலையில் கம்பீரமாக, இக்கோவில் ராஜகோபுரம் அமைந்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டு இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. வரும் 2018ல் கும்பாபிஷேகம் நடக்கின்ற நிலையில், ராஜகோபுரத்தில் ஏராளமான செடிகள் முளைத்துள்ளன. இச்செடிகளை அப்புறப்படுத்த, இன்ஜக்ஷன் முறைப்படி வேதிவினைப் பொருட்களை செலுத்தினால் மட்டுமே, நிரந்தரமாக வேர் வளர்வதை கட்டுப்படுத்த முடியும். அதற்கென தேர்ச்சி பெற்ற பணியாளர்களைக் கொண்டு, செடிகளின் வேர்களை நீக்கினால் ராஜகோபுரம் பாதுகாப்பாக இருக்கும். எனவே, செயல் அலுவலரும், இந்து சமய அறநிலையத்துறையும் உடனடியாக தனிக்கவனம் செலுத்தி, ராஜகோபுரத்தை பாதுகாக்க வேண்டும். அதேபோல், கோவிலுக்குச் சொந்தமான இடத்தில், புதிதாக கடைகள் கட்டப்பட்டு, பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால், தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக கட்டிடங்கள் மாறியுள்ளது. கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருத்தணி: முருகன் கோவிலில் நடந்து வரும் கந்தசஷ்டி விழா ஒட்டி, வரும் 26ம் தேதி வரை தினமும், இரண்டு மணி ... மேலும்
 
temple news
ஹாசன்: பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில், 14 நாட்களுக்குப் பின், நேற்று நடை அடைக்கப்பட்டது. இந்தாண்டு, 25 ... மேலும்
 
temple news
கீழக்கரை: கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சி மங்களேஸ்வரி நகரில் புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar