Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

குட்டகரை மாரியம்மன் கோவில் ... பாரியூர் கோவில் உண்டியலில் ரூ.7.15 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பசுபதீஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தில் வளர்ந்த செடிகளை அகற்ற வேண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2015
12:06

கரூர்: ""கரூர் நகரில் நடுநாயகமாக விளங்கும் பசுபதீஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும், என்று, திருக்குறள் பேரவை செயலாளர் பழனியப்பன் தெரிவித்தார். திருக்குறள் பேரவை செயலாளர் பழனியப்பன், கூறியதாவது, கரூரில் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் மிகவும் தொன்மையான கோவிலாகும். இக்கோவில் முசுகுந்த சக்கரவர்த்தியால் திருப்பணி செய்யப்பட்ட கோவிலாகும். இதன் முன்புறம் ஏழு நிலையில் கம்பீரமாக, இக்கோவில் ராஜகோபுரம் அமைந்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டு இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. வரும் 2018ல் கும்பாபிஷேகம் நடக்கின்ற நிலையில், ராஜகோபுரத்தில் ஏராளமான செடிகள் முளைத்துள்ளன. இச்செடிகளை அப்புறப்படுத்த, இன்ஜக்ஷன் முறைப்படி வேதிவினைப் பொருட்களை செலுத்தினால் மட்டுமே, நிரந்தரமாக வேர் வளர்வதை கட்டுப்படுத்த முடியும். அதற்கென தேர்ச்சி பெற்ற பணியாளர்களைக் கொண்டு, செடிகளின் வேர்களை நீக்கினால் ராஜகோபுரம் பாதுகாப்பாக இருக்கும். எனவே, செயல் அலுவலரும், இந்து சமய அறநிலையத்துறையும் உடனடியாக தனிக்கவனம் செலுத்தி, ராஜகோபுரத்தை பாதுகாக்க வேண்டும். அதேபோல், கோவிலுக்குச் சொந்தமான இடத்தில், புதிதாக கடைகள் கட்டப்பட்டு, பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால், தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக கட்டிடங்கள் மாறியுள்ளது. கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar