நீறில்லா நெற்றி பாழ்; கோயில் இல்லா ஊர் பாழ்என்பது முதுமொழி. நெற்றியில் திருநீறு அணியாதவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது. கோயில் இல்லாத ஊரில் சுபிட்சம் இருக்காது என்பது இதன் பொருள். யாரிடமும் சொல்ல முடியாத கஷ்டங்களை மனதில் வைத்துக் கொண்டு திண்டாடுபவர்கள் சுவாமியிடம் முறையிட்டு மன அமைதி பெறுவதே கோயில்களுக்கு செல்வதன் நோக்கம். இயற்கை சீற்றங்களில் இருந்தும் காக்கக் கூடிய வகையில் கோயில்கள் கட்டப்படுகின்றன. இதுபோன்று மனிதவள, விஞ்ஞான, மருத்துவரீதியாக கோயிலின் அவசியம் பற்றி எவ்வளவோ சொல்லலாம். இதனாலேயே கோயில் இருக்கும் பகுதியில் குடியிருக்குமாறு சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.