அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோவில், வளத்தி மங்களாம்பிகை சமேத மருதீஸ்வரர் கோவில் களில் குரு பெயர்ச்சி யாகம் நடக்கிறது.கடக ராசியிலிருந்து குரு பகவான் சிம்ம ராசிக்கு ஆனி 20 ம் தேதி ( 5ம் தேதி) நள்ளிரவு 1: 03 மணிக்கு பெயர்ச்சியாகிறார்.
இதை முன்னிட்டு 6ம் தேதி காலை 7:00 மணி முதல் 9:00 மணி வரை அவலூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு யாகமும், குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனையும் நடக்கிறது.இதே போல் வளத்தி மங்களாம்பிகை சமேத மருதீஸ்வரர் கோவிலிலும் சிறப்பு யாக வழிபாடு நடக்க உள்ளது.