சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூரில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பவளநிற வள்ளியம்மன், பூவேந்தியநாதர் கோயிலில் குருப்பெயர்ச்சி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி கோயில் வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு யாகம் வளர்த்தனர். பின், சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது.