Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவொற்றியூர் வடிவுடையம்மன் ... திருத்தணி கிருத்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடமதுரை கோயிலில் புதிய தேர்: ரதவீதிகளில் மின்இணைப்பு மாற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2015
12:07

வடமதுரை:வடமதுரையில் தேரோடும் வீதிகளில் குறுக்கே செல்லும் மின் ஒயர்களை நிரந்தரமாக மாற்றியமைக்கும் பணி துவங்கியுள்ளது.வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் சில நூறு ஆண்டுகளை கடந்த பழமை வாய்ந்ததாகும். இங்கு ஆடி மாதத் திருவிழாவில் தேரோட்டம் நான்கு ரத வீதிகளில் நடைபெறும். தேரோட்டம் துவங்கும் முன் தேருக்கு இடையூறின்றி, நான்கு வீதிகளில் குறுக்கே செல்லும் மின் ஒயர்களை மின்வாரியத்தினர் அப்புறப்படுத்தி விடுவர். தேர் கடந்த பின்னர், அவற்றை மீண்டும் பொருத்துவர். இதனால் தேரோட்டத்தின் போது நான்கு ரத வீதிகளையொட்டிய பகுதிகள் அனைத்தும் இருளில் முழ்கி இருக்கும். தேரின் பின்வரும் ஜெனரேட்டர் மூலம் பெறும் மின்சாரத்தால் எரியும் அலங்கார விளக்குகளில் இருந்துதான் அப்பகுதியில் வெளிச்சம் இருக்கும். கடந்த திருவிழா வரை பயன்பாட்டில் இருந்த தேர் சிறிய அளவிலானது என்பதால், குறைந்தளவு சிரமத்துடன் பக்தர்கள் தேரை இழுத்து சமாளித்தனர். அதோடு, திருவிழா நேரத்தில் திருட்டு சம்பவங்களுக்கும் வாய்ப்பு தருவது போல இருந்து வந்தது.

தற்போது இக்கோயிலுக்கு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேர் 9.5 டன் எடையுடன் 15 அடி அகலம், 35 அடி உயரத்துடன் உள்ளது. அதிக எடை, அகலம், உயரம் கொண்டதாக புதிய இருப்பதால் இருளில் தேரோட்டம் நடத்துவது சிரமம். எனவே, தேர் வீதிகளில் குறுக்கே செல்லும் மின் ஒயர்களை நிரந்தரமாக அகற்றிவிட்டு, மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற பொதுமக்களின் எண்ணத்தை, தினமலர் நாளிதழ் வெளியிட்டது. இதனையடுத்து தேர் வீதியில் குறுக்கே செல்லும் மின்வயர்களை நிரந்தரமாக மாற்றியமைக்கும் பணியை மின்வாரியம் நேற்று துவங்கியது. இதற்காக பல இடங்களில் இருந்து புதிய மின்கம்பங்கள் வந்துள்ளன. மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கலைவேந்தன், உதவி பொறியாளர் சேவியர் கூறுகையில்,"தேரோட்டத்திற்கு முன்னதாக இப்பணியை நிறைவு செய்வோம். எதிர்காலத்தில் தேரோட்ட நாளில் மின்சப்ளை துண்டிப்பு பிரச்னை இருக்காது என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கரிங்கரைப்புள்ளி காடாங்கோடு பகவதி அம்மன் கோவில் பிரதிஷ்டை தின உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; அஷ்டமி பூப்பிரதட்சனம் யொட்டி ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், உலக சாதனை முயற்சியாக, 900க்கும் மேற்பட்ட நாட்டிய ... மேலும்
 
temple news
கூடலுார்; கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் கூடாரவல்லி திருவிழா வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை சாரல் மலையில் சாலைகளில் பாதுகாப்புக்கு இன்றி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar