திருமங்கலம்: திருமங்கலம் அருகே பி.அம்மாபட்டியில், ஆடி வெள்ளியை முன்னிட்டு சடச்சியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா நடந்தது. இதில் மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. வலையப்பட்டி, பன்னிக்குண்டு, காண்டை உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.