நந்தவனத்தில் கிடைத்த குழந்தை ஆண்டாள் மீது அதிக பாசம் கொண்டு வளர்த்தார் பெரியாழ்வார். ஒரு தந்தை தன் மகள் மீது எவ்வாறு பாசம் கொண்டிருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தார். ஆண்டாளை அவர் பெருமாளுக்கு திருமணம் செய்து கொடுக்க சென்றபோது, ஆண்டாள் சுவாமியுடன் சேர்ந்துவிட்டாள். அப்போது அவளைக் காணாத அவர் ஆற்றாமை மிகுதியால்,ஒருமகள் தன்னையுடையேன் உலகம் நிறைந்த புகழால்திருமகள் போல வளர்த்தேன்செங்கண்மால் தான் கொண்டுபோனான் என்று பாடினார்.தனது இல்லத்தில் மகாராணியாக வாழ்ந்தவள், தற்போது பெருமாளை மணம் முடிக்கிறாளே! அவள் இங்கே இருந்தது போல சிறப்புடன் அங்கே வாழ்வாளா! என்று பதைபதைப்புடன் இப்பாடலைப் பாடினார்.பகவானுக்கே பெண்ணைக் கட்டிக் கொடுத்தாலும், அவள் அந்த வீட்டில் எப்படி வாழ்வாளோ என்ற பயம் அந்தக் காலத்திலேயே இருந்திருக்கிறது. தெய்வப்பிறவிகளுக்கே இப்படி என்றால்... இப்போது நம்மைப் பற்றி கேட்கவா வேண்டும்!