வைகாசி பவுர்ணமியின் போது, ஆண்டாளுக்கு தயிர் சாதமும், பால் மாங்காயும் நைவேத்யம் செய்கின்றனர். சுண்ட காய்ச்சிய பாலில் நறுக்கிய மாங்காய் துண்டுகள், மிளகு, சீரகம், ஜீனி ஆகியவை சேர்க்கப்பட்டு இது தயாரிக்கப்படுகிறது. வைகாசி கோடை மாதமாக இருப்பதால், பெரியாழ்வார் தலை முறையைச் சேர்ந்த குடும்பத்தினர் (ஆண்டாளின் வீட்டார்) இதனை படைக்கின்றனர். இந்நேரத்தில் ஆண்டாள் வெண்ணிற உடை, சந்தனம், மல்லிகை மலர் சூடி காட்சி தருவாள்.