கும்மிடிப்பூண்டி: எளாவூர், செல்லியம்மன் கோவிலில், தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி அருகே, எளாவூர் கிராமத்தில் உள்ளது செல்லியம்மன் கோவில். கடந்த, 26ம் தேதி துவங்கிய திருவிழாவை முன்னிட்டு, நேற்று தேர் திருவிழா நடந்தது. கிராமவாசி கள், அங்குள்ள வீதிகள் வழியாக, தேரை வடம் பிடித்து இழுத்தனர். அலங்கரிக்கப்பட்ட அம்மன், தேரில் பவனி வந்து, பக்தர்களுக்கு அருள்பாலி த்தார்.