பதிவு செய்த நாள்
29
ஆக
2015
12:08
கடலூர்: கடலூர்
கூத்தப்பாக்கம் ராகவேந்திர சுவாமிகள் கோவிலில் ஆராதனை விழா நாளை
துவங்குகிறது. கடலூர் கூத்தப்பாக்கத்தில் உள்ள ராகவேந்திர சுவாமிகள்
கோவிலில் 344ம் ஆண்டு ஆராதனை விழா நாளை (30ம் தேதி) துவங்கி வரும் 1ம் தேதி
வரை 3 நாட்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு தினமும்
அதிகாலை 5:00 மணிக்கு சுப்ரபாதம், நிர்மால்யம், வேத பாராயணம், 9:30
மணிக்கு சிறப்பு அ பிஷேகம், பூஜை, பகல் 12:00 மணிக்கு அலங்காரம்,
ஹஸ்தோதகம், இரவு 8:30 மணிக்கு ஸ்வஸ்தி, பல மந்த்ராட்சதை நடக்கிறது.
தொடர்ந்து 30ம் ÷ ததி மாலை 6:00 மணிக்கு கோபி பாகவதர் குழுவினரின்
பாண்டுரங்க லீலை நிகழ்ச்சி, 31ம் தேதி காலை 9:00 மணிக்கு பாலச்சந்தர்,
பாலமுருகன் குழுவினரின் நாதஸ்வர இசை, மாலை 6:30 மணிக்கு முரளீதர சர்மாவின்
சொற்பொழிவு, 1ம் தேதி மாலை 6:00 மணிக்கு ராகவேந்திர சுவாமி பஜனா மண்டலி
குழுவினரின் ஹரிநாம சங்கீர்த்தனம் நடக்கிறது. ஆராதனைக்கு பச்சரிசி,
பருப்பு, வெல்லம், பால், நெய், தேன் மற்றும் அபிஷேக திரவிய ங்கள்
வரவேற்கப்படுகின்றன. விழா ஏற்பாடுகளை ஸ்ரீமத்வ சித்தாந்த சேவா சங்கத்தினர்
செய்து வருகின்றனர்.