இலங்கை கதிர்காமத்தில் முறிவண்டி விநாயகர் கோவில் உள்ளது. இந்தக் கோவில் வழியாக செல்லும் பக்தர்கள் தங்கள் வாகனங்களில் இருந்து இறங்கிச் சென்று இவரை வழிபட்ட பிறகே அவ்விடத்தைக் கடக்கின்றனர். அவ்வாறு செய்யாமல் போனால் வாகனம் பழுதாகி விடும் என்பது நம்பிக்கை. ஒரு காலத்தில் மாட்டு வண்டிகளில் செல்வோர் இவ்விடத்தில் வணங்காமல் சென்றால் அச்சு முறிந்துவிடும் என்ற நிலை இருந்தது. இதன்காரணமாக இவர் முறிவண்டி விநாயகர் எனப்பட்டார்.