திண்டிவனம்:
தீவனூர் லட்சுமி நாராயணா பெருமாள் கோவிலில், புரட்டாசி மாதத்தை முன்னிட்டு,
சிறப்பு அபிஷேகம் நடந்தது. திண்டிவனம் அடுத்த தீவனூர் லட்சுமி நாராயண
பெருமாள் கோவிலில், புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு,
சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வெள்ளிக்கவசத்தில் லட்சுமி நாராயண
பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7.00 மணிக்கு, லட்சுமி
நாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் வீதியுலா நடந்தது. விழாவிற்கான
ஏற்பாடுகளை, கோவில் பரம்பரை அறங்காவலர் முனுசாமி மற்றும் கிராம முக்கிய
பிரமுகர்கள் செய்திருந்தனர்.