வேலாயுதம்பாளையம்: வேலாயுதம்பாளையம், புகழிமலை பாலசுப்ரமணிய ஸ்வாமி கோவிலில் புரட்டாசி மாதம் சஷ்டி விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர். சஷ்டி விழாவை முன்னிட்டு, உச்சி கணபதி மற்றும் பாலசுப்ரமணிய ஸ்வாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், மஞ்சள் உட்பட பல்வேறு வாசனை திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின், பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
* வேலாயுதம்பாளையம் ஐயப்பன் ஸ்வாமி கோவிலில் உள்ள முருகனுக்கும் சஷ்டி விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை, பூஜைகள் நடந்தது.