Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாலசமுத்திரம் பெருமாள் கோயில் ... முருக்கேரி கோவிலில் மழை வேண்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆரணி அருகே சமணர் படுக்கை கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 செப்
2015
12:09

திருவண்ணாமலை: ஆரணி அருகே, கண்டுபிடிக்கப்பட்டுள்ள சமணர் படுக்கையை, பாதுகாக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆரணி அடுத்த, எஸ்.யு. வனம், நாசா மலையை சுற்றிப்பார்க்க, சேவூர் கிராமத்தில் வசிக்கும் ஜைனர் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் கடந்த, இரண்டு நாட்களுக்கு முன் சென்றனர். அப்போது, குகைக்குள் இரண்டு சமணர் படுக்கை மற்றும் துறவிகள் மருத்துவம் பார்த்ததற்கு அடையாளமான குழிகள் இருப்பதும் தெரியவந்தது. இது குறித்து அந்த இளைஞர்கள் பொதுமக்களிடம் தெரிவித்தனர். பின்னர், பொதுமக்கள் நாசா மலைக்கு சென்று சமணர் படுக்கைகளை பார்வையிட்டனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: நாசா மலையில், ஆயிரம் அடி உயரத்தில் குகை உள்ளது. குகைக்குள், இரண்டு சமணர் படுக்கை உள்ளன. மூலிகை தழைகள் உரலில் இடித்து மருந்து தயாரித்து வைத்தியம் பார்த்ததற்கான சான்றாக குழி உள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன், துறவிகள் வாழ்ந்ததற்கான தடயங்கள் உள்ளன. இந்த இடத்தை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து பாதுகாக்க வேண்டும். மேலும், சமணர்கள் வாழ்வியல் இடம் குறித்து முழுமையான தகவலை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதேபோல், ஆரணி அருகே உள்ள திருமலையிலும் சமணர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. எனவே தொல்பொருள் துறையினர் இந்த பகுதியினை ஆய்வு செய்து பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar