Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் ... புகழிமலையில் கிருத்திகை விழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் சேதமடைந்த உற்சவர் சிலையை மாற்ற கூடாது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 அக்
2015
12:10

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், 2.10.15-ல் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், சேதமடைந்துள்ள உற்சவர் சிலையை மாற்றக் கூடாது; பழைய சிலையைத்தான் பயன்படுத்த வேண்டும் என, உபயதாரர்கள் கருத்து தெரிவித்தனர்.

1,000 ஆண்டுகள் பழமை: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உற்சவர் சிலை, 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. தற்போது அந்த சிலையின் கால் பகுதி சேதமடைந்துள்ளது.இதையடுத்து சேதமடைந்த உற்சவர் சிலையை மாற்றி, வேறு சிலையை அமைக்க, ஆணையருக்கு கோவில் ஸ்தானிகர்கள் சிலர் கடிதம் எழுதினர். அறநிலையத்துறை ஆணையர் அதை ஏற்கவில்லை.

இந்நிலையில், அரசு தலைமை ஸ்தபதி முத்தையா, கடந்த செப்., 2ம் தேதி, கோவிலை பார்வையிட்டு கூறுகையில், சேதமடைந்துள்ள சிலை அபூர்வமானது. அதைபோல வேறு ஒரு சிலையை செய்ய முடியாது. சேதமடைந்த பகுதியை சரி செய்து பயன்படுத்தலாம், என்றார்.
இதுகுறித்து உபயதாரர்களிடம் கருத்து கேட்கும் ஆலோசனை கூட்டம் கோவிலில் 2.10.15-ல் நடந்தது.

2.5 கிலோ தங்கம்: அதில், சேதமடைந்துள்ள உற்சவர் சிலையை மாற்றக் கூடாது; பழைய சிலையைத்தான் பயன்படுத்த வேண்டும் என, உபயதாரர்கள் அனைவரும் கருத்து தெரிவித்தனர். அந்த சிலையை சரி செய்ய, 2.5 கிலோ தங்கம் தேவைப்படும். அதற்கு, 80 ஆயிரம் ரூபாய் கூலி கொடுக்க வேண்டி வரும் என, ஸ்தபதி சார்பில் தெரிவிக்கப்பட்டது. கோவிலில் உள்ள தங்கத்தை வைத்து சிலையை சரி செய்யுங்கள்; நாங்கள் கூலியை தந்து விடுகிறோம் என, உபயதாரர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் கூறுகையில், ஆணையருக்கு கடிதம் அனுப்புகிறோம். அவரிடமிருந்து உத்தரவு வந்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஜே.பி.: தமிழ்நாடு பிராமணர் அசோசியேஷன் நடத்தும் பெங்களூரில் இரண்டு நாட்கள் நடக்கும், ராதா கல்யாண ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முதலியார்பேட்டை, ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேக திருப்பணிக்காக அரசு சார்பில், ரூ.15 ... மேலும்
 
temple news
இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. நவ.3ம் தேதி மகா ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், தொடுதிரை தகவல் பெட்டியை,கலெக்டர் கலைச்செல்வி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனின் 1040வது சதய விழா அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு,  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar