ராமநாதபுரம்:ராமநாதபுரம் ஜெபமாலை அன்னை சர்ச் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. சிவகங்கை முதன்மை பங்கு தந்தை ஜோசப் லூர்து ராஜா மறையுரை பேசினார். அக்., 9 வரை தினமும் மாலை 6 மணிக்கு மறையுரை சிந்தனைகள் வழங்கப்படுகிறது.
அக்., 10 மாலை 5.30 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது. அக்., 11 காலை 5.30 மணிக்கு திருவிழா கூட்டு திருப்பலி, காலை 7.30 மணிக்கு புது நன்மை திருப்பலி, மாலை 5.30 மணிக்கு நற்கருணை பவனியுடன் கொடியிறக்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.
ஏற்பாடுகளை பங்கு தந்தை ராஜமாணிக்கம், உதவி பங்கு தந்தை ஆரோக்கிய பிரிட்டோ பிரபு மற்றும் பங்கு பேரவை நிர்வாகிகள் செய்துள்ளனர்.